Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எப்.ஐ.அமைப்புக்கு தடை: 108 தேங்காய் உடைத்து வழிபாடு!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (10:32 IST)
நாடு முழுவதும் உள்ள பி.எப்.ஐ.அமைப்பை தடை செய்ததை வரவேற்று பாரத மக்கள் கட்சியினர் கோவை 108 தேங்காய் உடைத்து வழிபாடு.


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் அடிப்படையில், இந்த அமைப்பிற்கு நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பல்வேறு இந்து அமைப்புக்களும் வரவேற்ற நிலையில், கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பாக அதன் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் தலைமையில், கோவை காந்திபுரம் சித்தி விநாயகர் கோவிலில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

இது குறித்து ராமநாதன் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின்  இந்த அறிவிப்பை வரவேற்று. 108 தேங்காய் உடைத்து  கோவிலில் சிறப்பு வழிபாடு செய்ததாக தெரிவித்தார். இதில் அகில பாரத மக்கள் கட்சி மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா, துணை தலைவர் சேகர், மற்றும் பூசாரிகள் சங்க தலைவர் பூபதி ராஜ், வடவள்ளி மண்டல நிர்வாகிகள் வினோத் நவீன் ஸ்ரீராம் கோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments