Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டே நாளில் 19 குழந்தைகளுக்கு கொரோனா: புதுச்சேரியில் பரபரப்பு

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (15:42 IST)
புதுச்சேரியில் இரண்டே நாட்களில் 19 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் புதுச்சேரியில் திடீரென கடந்த இரண்டு நாட்களில் ஒரு வயதுக்கு உட்பட்ட 13 குழந்தைகள் உள்பட 19 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
இரண்டே நாட்களில் 19 குழந்தைகளுக்கு பரவியுள்ளது புதுச்சேரி மக்கள் மனதில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது. ஏற்கனவே மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கும் என்ற தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments