Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்மபுரி தொகுதியில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு.. பகல் 1 மணி நிலவரப்படி எவ்வளவு?

Siva
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (13:59 IST)
தமிழகத்தில் இன்று காலை முதல் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வாக்களித்து வருவதை பார்க்கும் போது நிச்சயம் 70% வாக்கு சதவீதம் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்பாக பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் அதிகபட்சமாக பகல் ஒரு மணி நேர நிலவரப்படி தர்மபுரியில் 44 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் மிகவும் குறைவாக மத்திய சென்னையில் 32 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

ஆனால் அதே நேரத்தில் தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஆரணி, கரூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமாகவும் மீதமுள்ள 11 மாவட்டங்களில் 32 முதல் 39 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments