Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாஷேத்ரா விவகாரத்தில் இன்று அறிக்கை தாக்கல்: மகளிர் ஆணைய தலைவர் குமாரி தகவல்..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (10:48 IST)
கலாஷேத்ரா  விவகாரத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேட்டி அளித்துள்ளார்.
 
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தவில்லை என தகவல் வெளியானது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது மாநில மகளிர் ஆணையம் விசாரணை செய்து வருகிறது. 
 
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பாலியல் தொந்தரவுள்ளதாக மாணவிகள் குற்றம் காட்டியுள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் தொடர்ச்சியாக மாணவிகளின் குற்றச்சாட்டை கண்டுகொள்ளாததால் மாணவிகள் போராட்டம் நடத்தியதாகவும் குமாரி தெரிவித்துள்ளார். 
 
பாதிக்கப்பட்டவர்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக இன்று அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேட்டி அளித்துள்ளார். 
 
இந்த நிலையில் கலாசத்ரா இயக்குனர் ரேவதி இன்று மகளிர் ஆணையத்தில் ஆஜராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்