Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலதிகாரியை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர் – பல்லாவரத்தில் அதிர்ச்சி சம்பவம் !

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (14:31 IST)
சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவக் குடியிருப்பில் மேலதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பில் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் ஜோஷி வசித்து வந்தார். இவர் சென்னை ராணுவ அகடாமியில் ஹவில்தாராக பணியாற்றி வந்துள்ளார். அங்கு அவருக்குக் கீழ் ரைபிள் மேனாக பணியிலிருந்த ஜெட்ஷீருக்கும் இவருக்கும் இடையில் பணி ரீதியாக சிலகாலமாக பிரச்சனை இருந்துள்ளதாகத் தெரிகிறது.

நேற்று இரவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அதன் பின்னர் பிரவீன்குமார் ஜோஷி தனது வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் கோபம் தீராத ஜெட்வீர் நள்ளிரவு பிரவின்குமாரின் வீட்டுக்கு சென்று அவரைத் துப்பாக்கியில் சுட்டுள்ளார். அவர் அந்த இடத்திலேயே இறந்துவிட தன்  துப்பாக்கியாலேயேத் தன்னையும் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இருவரின் கொலை மற்றும் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments