Webdunia - Bharat's app for daily news and videos

Install App

44 நாட்களில் அத்திவரதர் வசூலித்த காணிக்கை எவ்வளவு தெரியுமா?

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (10:44 IST)
அத்திவரதர் கடந்த 44 நாட்களாக தரிசித்த பக்தர்கள் எவ்வளவு காணிக்கை செலுத்தி உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அவரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 
 
ஜூலை 31 ஆம் தேதி வரை சயனகோலத்தில் காட்சித் தந்த அத்திவரதர், ஆகஸ்து 1 ஆம் தேதியிலிருந்து நின்ற கோலத்தில் காட்சித் தந்து வருகிறார். வருகிற 17 ஆம் தேதி மீண்டும் குளத்திற்குள் செல்கிறார். 
இன்னும் 2 நாட்களில் தரிசனம் முடிய உள்ள நிலையில், தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதேபோல், கடந்த 44 நாட்களில் அத்திவரதர் கோவிலில் ரூ.6 கோடியே 81 லட்ச ரொக்க பணமாக உண்டியலில் போடப்பட்டுள்ளது. இதை தவிர்த்து 87 கிராம் தங்கமும், 2507 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments