Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரம் காவலர்களுக்கு பிரியாணி விருந்து; 3 நாட்கள் விடுமுறை! – டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (13:42 IST)
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி காவல் பணிகளில் ஈடுபட்ட காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து அளித்துள்ளார்.

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையில் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை நடந்த இந்த போட்டியில் பல நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் சென்னை வரும் சர்வதேச வீரர்கள்களுக்காக விமான நிலையம், தங்கும் விடுதிகள் மற்றும் போட்டி நடைபெறும் இடத்திலும் காவல் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. பல காவலர்கள் செஸ் ஒலிம்பியாட் முடிவடையும் வரை விடுமுறையின்றி இரவு, பகல் பாராமல் பணியாற்றினர்.

அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக டிஜிபி சைலேந்திரபாபு இன்று ஒலிம்பியாட் பணியில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாருக்கு பிரியாணி விருந்து வழங்கினார். மேலும் அவர்களுக்கு 3 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments