Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பிரமுகர் மீது விசிகவினர் தாக்குதல்! – பெண்கள் உட்பட 42 பேர் கைது!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (09:00 IST)
மதுரையில் பூத் கமிட்டி படிவம் வாங்க சென்ற பாஜகவினரை தாக்கியதாக விசிகவினர் 42 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனு தர்மம் குறித்த திருமாவளவனின் பேச்சுக்கு பிறகு பாஜக – விசிக இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் பூத் கமிட்டி படிவம் வாங்க பாஜகவினர் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே இருந்த சில விசிகவினருக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

வாக்குவாதம் கைகலப்பான நிலையில் விசிகவினர் பாஜகவினரை தாக்கியதுடன், அவர்களது வாகனத்தையும் நொறுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக 18 பெண்கள் உட்பட 42 விசிகவினர் மீது கொலை தாக்குதல் முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடிக்கிற அடியில.. பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாவார்கள்! - பிரதமர் மோடி கர்ஜனை!

இவர் யாருங்க வரி போடுறதுக்கு..? ட்ரம்ப்பை முதுகில் குத்திய அமெரிக்க மாகாணங்கள்! - நீதிமன்றத்தில் வழக்கு

கும்பகோணத்தில் ’கருணாநிதி பல்கலை கழகம்’: சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments