Webdunia - Bharat's app for daily news and videos

Install App

196 கருணை மதிப்பெண்களுக்கு சிக்கல்: நாளை மேல்முறையீடு செய்கிறது சி.பி.எஸ்.இ?

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (20:45 IST)
நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு கேள்வித்தாளில் மொழிபெயர்ப்பு பிழை இருந்ததால் 196 கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பால் மீண்டும் மதிப்பெண் பட்டியல் தயாரித்து மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டிய நிலை சி.பி.எஸ்.இக்கு உள்ளது 
 
புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டு மீண்டும் மருத்துவ கவுன்சிலிங்கை நடத்துவது எப்படி சாத்தியமாகும் என்பது குறித்து சி.பி.எஸ்.இ. ஆலோசனை நடத்தி வரும் நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாளை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சி.பி.எஸ்.இ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் இந்த வழக்கை தொடுத்து வெற்றியும் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவரும், மேல்சபை எம்.பி.யுமான டி.கே.ரெங்கராஜன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால் சுப்ரீம் கோர்ட் உடனடியாக உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் டி.கே.ரெங்கராஜன் தரப்பு வாதத்தை கேட்ட பின்னரே தீர்ப்பை வழங்க முடியும். இதனால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments