Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கே இப்படினா..? செக்கெண்ட் ரவுண்டு வேற இருக்கே: ரெய்ன் அப்டேட்!

சென்னை
Webdunia
புதன், 29 ஜூலை 2020 (08:45 IST)
சென்னையில் பெய்யும் மழை சிலமணி நேரங்களில் நிற்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் இன்று முதல் சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் படி நேற்று மாலை முதல் சென்னையில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அதிகாலையில் இருந்தும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. 
 
சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, எழும்பூர், சேத்துப்பட்டு, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வேறு சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. 
 
சென்னை குரோம்பேட்டையில் நேற்று மாலை பெய்த ஒரு மணி நேரம் மழையால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது என்பதும் இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்குவதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழை இன்னும் சில மணி நேரத்தில் நின்றுவிடும் எனவும் பிற்பகல் முதல் நாளை அதிகாலை வரை இடியுடன் கூடிய மழை சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments