Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (17:42 IST)
நாடாளுமன்றத்தில் இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இன்று நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் இருவர் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தின் பகுதிக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த இருவரையும் தற்போது காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் இன்று இருவர் நுழைந்த நிலையில் நாளை துப்பாக்கியுடன் தீவிரவாதிகள் ஏன் நுழையக்கூடாது என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
 இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குளறுபடியால் நமது ஜனநாயக கோவிலான நாடாளுமன்றத்திற்கு ஆபத்தான அச்சுறுத்தல் என்றும் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக தாமதம் இன்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments