Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக அறிவிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி… குவியும் பாராட்டுகள்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (11:25 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக பாரதி அண்ணா என்பவரை நியமித்துள்ளது.

மற்ற எல்லாத்துறைகளிலும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரங்களையும் வாய்ப்புகளையும் பெற்றிருந்தாலும், அரசியலில் இன்னும் இந்த நிலையை எட்ட முடியவில்லை. இந்தியாவில் இருக்கும் தேசிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் என எதிலும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிடப்படும்படியான பதவிகளையோ பொறுப்புகளையோ வகிக்கவில்லை.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக பாரதி அண்ணா என்ற கண்பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியை நியமித்துள்ளது. மதுராந்தகத்தில் பிறந்த பாரதி அண்ணா சட்டப்படிப்பை முடித்தவர். கண்பார்வை குறைபாடுகளால் நீண்ட ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருந்த பாரதி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் முழுவதுமாக பார்வையை இழந்தார். இதற்கு முன்னர் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் பணியாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமை கட்சியல்ல, நம் தி.மு.க.. முதல்வர் ஸ்டாலின்

பஹல்காம் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம்.. பாதுகாப்பு குறைபாடு காரணமா?

கடலுக்கு அடியில் அதிநவீன ஆயுத சோதனை.. இந்திய கடற்படை சாதனை..!

முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவபழை: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

ரூ.1500 கோடி மோசடி புகார்: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது.. அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments