Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு..!

Senthil Velan
சனி, 6 ஏப்ரல் 2024 (11:47 IST)
திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க இருந்த வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
 
தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பாஜக மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவர்களும் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்றிரவு திருச்சி வரவுள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த பாஜக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது.

ALSO READ: மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..! கச்சத்தீவு மீட்பது உள்ளிட்ட 74 வாக்குறுதிகள்..!!
 
அதற்கான ஏற்பாடுகள் தயாரான நிலையில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி! தீவிரவாதிகள் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு! - காஷ்மீரில் பரபரப்பு!

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

அடுத்த கட்டுரையில்
Show comments