Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாயும் போலீஸ்; பதுங்கும் ரவுடிகள்! – Storming Operation; 3,325 ரவுடிகள் கைது!

Webdunia
ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (10:41 IST)
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் ஸ்டோர்மிங் ஆபரேஷனில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் குற்றச் செயல்களை தடுப்பதற்காக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஸ்டோர்மிங் ஆபரேசனை அறிவித்துள்ளார். அதன்படி கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட பல ரவுடிகள் வேகவேகமாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 52 மணி நேரத்திற்கும் தமிழகம் முழுவதும் இதுவரை 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள டிஜிபி சைலேந்திரபாபு கொலை குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை இன்னும் கடுமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments