Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி....

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (15:33 IST)
ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி அருகே மக்கள் கிராம சபைப்க் கூட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணியில் மற்றக் கட்சிகள் அணிசேர்ந்துள்ளன. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் ‘திமுக ஆட்சி அமைத்ததும் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’ என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பள்ளேறி, கொண்டக்குப்பம், மற்றும் மருதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கிராம மக்கள் சபைக் கூட்டத்தில் திமுக கட்சியின் பொதுச்செயலாளார் துரைமுருகன் பங்கேற்றிருந்தார்.

அப்போது, கூட்டம் முடிந்து செல்லவிருந்த துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர் உடனடியாக அப்போல்லோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே திமுக கட்சியின் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான துரைமுருகன் மூச்சுத்திணறல் காரணமாக திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விரையில் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments