Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலீஸ் எச்சரிக்கைவில்லை என விஜய் சொன்னது பொய்!.. திமுக ஐடி விங் பகிர்ந்த வீடியோ!...

Advertiesment
karur
கரூரில் இன்று பேசிய தமிழக முதலமைச்சர் விஜய் ‘நாமக்கல்லில் இருந்து நாங்கள் கரூருக்கு வந்த போது கூட்டம் அதிகமாக இருக்கிறது.. ஏதோ தப்பாக தெரிகிறது.. உங்கள் கூட்டத்தை ரத்து செய்து விடுங்கள்’ என காவல்துறை அதிகாரிகள் எங்களிடம் எச்சரிக்கை செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.. ஆனால் கரூர் பைபாஸிலிருந்து நான் பேசிய இடம் வரைக்கும் காவல்துறை அதிகாரிகள்தான் என்னை கூட்டி சென்றனர்.. இது மிகப்பெரிய நாடகம்’ என பேசியிருந்தார்.

ஆனால் இது உண்மையில்லை என திமுக ஐடி விங் மறுத்திருக்கிறது. கரூர் சம்பவம் நடந்த போது செய்தியாளர்களிடம் பேசிய அளித்த ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் ‘டிஎஸ்பி கரூர் மேம்பாலத்திலிருந்து விஜய் பேசிய இடம் வரை அவர்தான் டீமுடன் பேசி பேசி கூட்டிச் சென்றார்.. விஜய் பேசிய இடத்திலிருந்து 50 மீட்டருக்கு முன்னாடியே ‘இங்கே நின்று பேசுங்கள்.. இதற்கு மேல் வேண்டாம்.. கூட்டம் அதிகமாக இருக்கிறது.. இங்கு வைத்தே பேசி விடுங்கள்’ என டி.எஸ்.பி சொல்லியிருக்கிறார்.

ஆனால், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.. மக்கள் அங்கே காத்திருக்கிறார்கள். அங்கேயே பேசுகிறோம்.. இங்கே சரியான வசதி இல்லை.. மைக்கில் பேசினால் கேட்காது’ என்றெல்லாம் காரணம் சொல்லி அவர்கள்தான் அங்கே சென்றார்கள் என டி.எஸ்.பி பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் சம்பவத்தில் ஓடினது நீங்களா? நானா?.. செந்தில் பாலாஜி நக்கல்...