Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Chidambaram
Senthil Velan
புதன், 24 ஏப்ரல் 2024 (17:11 IST)
பொய்களை கூறி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது என்றும் காங்கிரஸ் மக்களின் சொத்துக்களை கைப்பற்றி, ஊடுருவல்காரர்களுக்கு மறுபங்கீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
நான் ராஜ்நாத் சிங்கிடம் கேட்க விரும்புகிறேன், சொத்துக்களை பறித்து ஊடுருவல்காரர்களுக்கு காங்கிரஸ் தருமென, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் எந்தப் பக்கத்தில் அந்த அறிக்கையைப் படித்தீர்கள்? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

ALSO READ: பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு.! வேலையில்லா திண்டாட்டம்..! பிரியங்கா காந்தி விமர்சனம்..!!
 
ராஜ்நாத் சிங் கண்ணுக்கு தெரியாத மையில் பேய்கள் எழுதிய ஆவணத்தைப் படித்துக் கொண்டிருந்தாரா? இதுபோன்ற அப்பட்டமான பொய்களை கூறி பாதுகாப்பு அமைச்சர் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments