Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை இலை பிரச்சனையில் திடீர் திருப்பம்: தினகரன் மனு நிராகரிப்பு

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (09:08 IST)
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியும், தினகரன் அணியும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் இதுகுறித்த விசாரணையை நேற்று தேர்தல் ஆணையம் தொடங்கியது.



 
 
இருதரப்பிலும் சீனியர் வழக்கறிஞர்கள் வாதாடிய நிலையில் டிடிவி தினகரன் தரப்பினர் தாக்கல் செய்த புதிய மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் குளறுபடி இருப்பதாகவும், அந்த பிரமாண பத்திரங்களில் உள்ள கையெழுத்துகளில் வித்தியாசம் இருப்பதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் தினகரனின் புதிய மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
ஆனால் இந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. பிரமாண பத்திரங்களில் உள்ள கையெழுத்து குறித்து யாரையும் நேரில் அழைத்து விசாரணை செய்ய இயலாது என்றும் எழுத்துபூர்வமான ஆவணங்களை அளிக்கும்பட்சத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதியாக கூறிவிட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தினகரனுக்கு பின்னடைவே என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments