Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னடா இது அதிசயமா இருக்கு.....ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எடப்பாடி

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (18:48 IST)
காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் கோரிக்கையை எடப்பாடி அரசு ஏற்றுக்கொண்டது.

 
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு குறித்து இன்று தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
 
வெகு நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
 
அனைத்து கட்சிகளும் பிரதமரை சந்திக்க வேண்டும்.
 
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
 
177.25 டிஎம்சி தண்ணீரை அதிகரிக்க சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
இதில் அனைத்து கட்சிகளும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments