Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞரே கடைசி அரசியல் தலைவர் : இளையராஜா புகழாரம்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (13:08 IST)
இலக்கியத்திலும், அரசியலிலும் கலைஞர் கருணாநிதியே கடைசியானவர் என இசைஞானி இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணமடைந்தார். அவரின் உடல் நேற்று மாலை சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவினர் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.
 
மேலும், அவரது இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியாத பலரும் தங்கள் உணர்வுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். தேமுதிக விஜயகாந்த் ஒரு கண்ணீர் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
 
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக சென்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ் பெருங்குடி மக்களே! கலைஞரின் மரண செய்தி நமக்கெல்லாம் துக்க தினமாக மாறிவிட்டது. இந்த துக்கத்திலிருந்து எப்படி வெளியே வரப்போகிறோம் என தெரியவில்லை. அரசியல் தலைவர்களிலேயே கலைஞரே கடைசி தலைவர். தமிழ் திரைப்படங்கள் மூலம் சுத்தமான தமிழ் வசனங்களை அவர் அள்ளி அள்ளி வழங்கியுள்ளார். அரசியல், கலை, இலக்கியம், தமிழ் என அனைத்து துறைகளிலும் அவர் சிறந்து விளங்கினார். அவரின் இழப்பு நமக்கு ஈடுசெய்யமுடியாத ஒன்றாகும்” என தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments