Publish Date: Tue, 26 May 2026 (11:59 IST)
Updated Date: Tue, 26 May 2026 (12:02 IST)
சமீபத்தில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். இது அதிமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தற்போது தனது என்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தற்போது தலைமை செயலகத்துக்கு வந்த இசக்கி சுப்பையா சபாநாயகர் ஜேடிசி பிரபாகரை சந்தித்து ராஜினிமா செய்வதாக அறிவித்தார். ஆனால், ராஜினாமாவை கைப்பட எழுதி கொடுக்குமாறு சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் கேட்க இசக்கி சுப்பையா தனது கைப்பட ராஜினாமா கருதத்தை எழுதி கொடுத்தார்.
ஏற்கனவே மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏவும் ராஜினாமா செய்திருப்பது செய்திருப்பது எடப்பாடி பழனிச்சாமி திறப்புக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அனேகமாக விரைவில் இசக்கி சுப்பையாவும் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்து மூன்று எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என கடிதம் கொடுத்திருந்தனர். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா செய்திருப்பது
குறிப்பிடத்தக்கது..