Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினை சந்தித்த கே.சி.பழனிசாமி! – திமுகவில் இணைவதாக தகவல்!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (11:48 IST)
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்தவர் கே.சி.பழனிசாமி. கடந்த ஆண்டு அதிமுக கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை தனிப்பட்ட முறையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தியதாக கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டார். மேலும் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகள், பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அதிமுக அறிவித்தது.

தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் கே.சி.பழனிசாமி திமுகவில் இணையலாம் என்றும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments