Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. ஆனால் சென்னை தப்பித்தது..!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (17:49 IST)
வங்க கடலில் சமீபத்தில் ஏற்பட்ட  காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்ற இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் சென்னைக்கு இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக எந்த விதமான ஆபத்தும் இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
அரபிக் கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் திருச்சி, பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சென்னை உள்பட வடக்கு மாவட்டங்களில் பெரிய மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கு  அடுத்த இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யும். மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை பகுதியிலும் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments