Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பீதி: தேர்வுக்கு செல்லாத மாணவர்கள்!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (10:30 IST)
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் நேற்று நடந்த பொது தேர்வில் பல மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் நேற்று மாலை முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. பெரும்பாலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்று வந்த இந்த பொதுத்தேர்வில் நேற்று 34,000 மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று மாலை முதல் ஊரடங்கு அறிவிக்க இருந்ததாலும், கொரோனா பீதியினாலும் நீண்ட தொலைவுகளிலிருந்து வந்து தேர்வெழுதும் மாணவர்கள் பலர் தேர்வுகளுக்கு வரவில்லை என தெரிகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1500 மாணவர்கள் தேர்வு எழுத வராதது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments