Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 20,000 கொரோனா தடுப்பூசி முகாம்கள்

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (08:24 IST)
ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் 20,000 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.  
 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நாளையும் மெகா தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 24,98,365 தடுப்பூசிகள் இருக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள்  நடைபெறுகிறது.  மூன்று மருத்துவ முகாம்களைப் போலவே இந்த நான்காவது மருத்துவ முகாமும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை நடைபெற உள்ளது. 
 
அக்டோபர் மாதத்தில் 1 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

இரண்டே ஆண்டுகளில் இழுத்து மூடப்பட்ட 28 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

போர் பதட்டம் இருந்தாலும் பங்குச்சந்தையில் ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments