Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சிகிட்டு ஓடும் நிர்வாகிகள்... காலியாகும் தேமுதிக கூடாரம்!!

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (11:46 IST)
தேமுதிக கட்சியின் கன்னியாகுமரி நிர்வாகிகள் சிலர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் தேமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்து படுதோல்வியை சந்தித்தது. 2% வாக்குகளை மட்டுமே மக்களவை தேர்தலில் பெற்று, மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது. 
இந்நிலையில், தேமுதிக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தேமுக ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். ஆம், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவரது தலைமையில் திமுகவில் இணைந்தனர். அப்போது கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன் உடன் இருந்தார். 
டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இருந்து நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைகள் விலகுவதை போலவே தற்போது தேமுதிகவிலும் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த் என்னும் ஆளுமை கட்சி பணிகளில் இருந்து விலகி இருப்பதாலும், பிரேமலதா கட்சி நடத்தும் விதம் அதிருப்தியை ஏற்படுத்துவதாலும், தேமுதிக கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments