Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம்: இன்று மாலை அமைச்சர் முக்கிய ஆலோசனை

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (12:22 IST)
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்ற சஸ்பென்ஸ் நீடித்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று மாலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மத்திய அரசு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த பின்னர் உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் குஜராத் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தன
 
ஆனால் 12ஆம் வகுப்பு வகுப்பு தேர்வு குறித்து கல்வியாளர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்களிடம் ஆலோசனை செய்து அதன் பின் முடிவை தெரிவிப்போம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் ஏற்கனவே பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஆலோசனை நடந்து வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்ய உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு காணொளி மூலம் இந்த ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் இந்த ஆலோசனையில் நடந்த விவரங்களை நாளை முதலமைச்சரிடம் அவர் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments