Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மடிப்பிச்சை எடுத்தாவது மீனவர்களுக்கு நிதியுதவி செய்வோம்: அனிதா ராதாகிருஷ்ணன்

Mahendran
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (11:18 IST)
மடிப்பிச்சை எடுத்தாவது மீனவர்களுக்கு நிதி உதவி செய்வோம் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய போது ’அமைச்சர் ராஜகண்ணப்பண்ணால் ஒரு லட்சம் பேருக்கு மேல் பயனடைந்து இருப்பார்கள் என்றும் ஆனால் ஓபிஎஸ் மூலம் ஒருவராது பயன் அடைந்ததாக சொல்ல முடியுமா என்றும் தெரிவித்தார்

இலங்கை கடற்படையினரிடம் மீனவர்கள் இழந்த படகுகளை மீட்கவும் நிவாரணம் தரவும் மத்தியில் புதிய ஆட்சி ஏற்பாடு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். நானும் அமைச்சர் ராஜகண்ணப்பனும் இந்த தொகுதியில் எம்எல்ஏ காதர் பாட்ஷாவும் சேர்ந்து மடிப்பிச்சை எடுத்தாவது மீனவர்களுக்கு நிவாரண நிதியை பெற்று தருவோம் என்றும் அவர் கூறினார்

இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள மீனவர்களின் படகுகளை மீட்டு தருவோம் என்றும் மீட்க முடியாவிட்டால் நிவாரணம் தருவோம் என்றும் மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்போம் என்றும் டீசல் விலையை குறைக்கவும், மானிய விலையில் டீசல் வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments