Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வழிச்சாலை வேணும்னு நான் சொல்லவே இல்ல! – அமைச்சர் ஏ.வ.வேலு விளக்கம்!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (13:32 IST)
சமீபத்தில் 8 வழிச்சாலை அவசியம் என அமைச்சர் ஏ.வ.வேலு பேசியதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் ஏ.வ.வேலு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் – சென்னை இடையே 8 வழி தேசிய நெடுஞ்சாலை அமைப்பது குறித்து கடந்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த திட்டத்தை செயல்படுத்துவது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, 8 வழிச்சாலை வரவே கூடாது என திமுக கூறவில்லை என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தற்போது விளக்கமளித்துள்ள அமைச்சர் ஏ.வ.வேலு “8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை. 8 வழிச்சாலை திட்டம் வேண்டும் என்று நான் எங்கும் பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது 8 வழிச்சாலை அமைப்பதில் உள்ள பிரச்சினைகளை சரி செய்யதான் கூறினார். போக்குவரத்து அதிகரிக்கும்போது சாலைகளை விரிவுப்படுத்திதான் ஆக வேண்டும். முந்தைய அதிமுக அரசு விவசாயிகளை அழைத்து பேசவேண்டும் என்றுதான் கூறினோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments