Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகையை ஒட்டி10,749 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர்

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:52 IST)
பொங்கல் பண்டிகையையொட்டி 10,000க்கும்அதிகமான பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
பொங்கல் தீபாவளி உள்ளிட்ட விசேஷ பண்டிகையின்போது சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. 
 
அந்த வகையில் பொங்கல் திருநாள் கொண்டாட சென்னையிலிருந்து மற்ற மாவட்டத்திற்கு செல்லும் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு 10 ஆயிரத்து 749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் 12-ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை இயக்கப்படும் என்றும் அதன் பிறகு 17, 18 ஆம் தேதியில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் இந்த சிறப்புப் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments