Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாற்று திரிபுதான் நாட்டுக்கு ஆபத்து! பிரதமர் மோடிக்கு பதிலடியா? – மு.க.ஸ்டாலின் பேச்சு!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (12:11 IST)
திரிக்கப்பட்ட வரலாறுகள் குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாறு திரிபு குறித்து பேசியுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி “திரிக்கப்பட்ட வரலாறுகளை நம்மிடம் கொடுத்து நமக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மை உண்டாக செய்துவிட்டார்கள். பண்டைய இந்தியாவின் அற்புதமான வரலாறு நமக்கு பெருமையையும், தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்க வேண்டும்’ என பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டில் வரலாற்று திரிபு குறித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கற்பனை கதைகளை வரலாறுகளாக சிலர் கூறுவதை ஏற்கக்கூடாது. இவ்வாறான வரலாற்று திரிபுகள்தான் நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்தாகும். அறிவியல் பார்வையை உருவாக்குவதுதான் இன்றைய காலத்தின் தேவை. பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

முன்னதாக ராமர் பாலம் விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகள் ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி வந்த நிலையில், சமீபத்தில் ராமர் பாலத்திற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லையென நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சம்பவங்களுக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கருத்தை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments