Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா..! – பாரதியார் பிறந்தநாளில் முதல்வர் ட்வீட்!

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (11:29 IST)
சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் கவியுமான மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்குறித்து பதிவிட்டுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவர்களில் ஒருவர் மகாகவி பாரதியார். சுதந்திர போராட்ட கருத்துகளை தனது பாடல்கள் வழியே பாமர மக்களையும் சென்றடைய செய்தவர் பாரதியார். இன்று அவரது 140வது பிறந்தநாளில் பலரும் அவர் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாரதியார் குறித்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா! திறம்பாட வந்த மறவன்! அறம்பாட வந்த அறிஞன்! படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று! தமிழுக்குத் தொண்டுசெய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்!” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments