Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கனமழைக்கு வாய்ப்பா?

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (14:04 IST)
வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி விட்டதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
 தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் அதாவது நவம்பர் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
அதன் பின்னர் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மையத்தை இந்திய மாநில ஆய்வு மையம் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.  
 
இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு உள்பட கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments