Publish Date: Sat, 08 Aug 2026 (17:05 IST)
Updated Date: Sat, 08 Aug 2026 (17:09 IST)
தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். விஜய் முதலமைச்சரான பின் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரில் 31 பேருக்கு அரசு பணி கொடுத்தார்.
இதற்கு படும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் இதை கடுமையாக விமர்சனம் செய்தனர். அதில் சீமானும் ஒருவர். அரசு வேலை இல்லாமல் பல இளைஞர்கள் காத்திருக்க இப்படி பலருக்கும் அரசு பணியை முதலமைச்சர் விஜய் கொடுக்கலாமா என்றெல்லாம் அவர் பேசியிருந்தார்.
மேலும், இதை ரத்து செய்யவேண்டும் எனக்கூறி நாம் தமிழர் கட்சி சார்பில் நீதிமன்றம் சென்றனர். இது தொடர்பான வழக்கில் முதல்வர் விஜய் கொடுத்த அரசு பணிகள் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தற்காலிய பணிகளை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என நீதிமன்றம் சொன்னது.
இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்ட நடிகர் கூல் சுரேஷ் சீமான் அண்ணே கரூர் மக்களுக்கு அரசு வேலை கிடைக்காம பண்ணிட்டியேண்ணே.. நீ எப்படிணே கரூருக்கு போய் ஓட்டு கேப்ப? உன்ன தப்பா பேசுவாங்க சீமான் அண்ணே என அதில் பேசியிருந்தார். இந்நிலையில் ஒரு விழாவில் இதற்கு பதிலடி கொடுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருத்தன் கேட்குறான்.. நான் எப்படி கரூர்ல போய் ஓட்டு கேட்பன்னு. இதுக்கு முன்னாடி மட்டும் எனக்கு இரண்டு, மூன்று தடவை ஓட்டு போட்டு கிழிச்சிட்டாங்களா.. போடா டேய் பைத்தியக்காரா.. நீ போடு போடாம போ.. யாரு கேட்டா என பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க