Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் யோகி ஆதித்யநாத் வருகையில் ரகளை! – பாஜகவினர் மீது வழக்கு!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (12:13 IST)
கோயம்புத்தூரில் நேற்று பிரச்சாரத்திற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்தபோது கடைகளை மூட சொல்லி தகராறு செய்த பாஜகவினர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி போட்டியிடும் நிலையில் பாஜக முக்கிய தலைவர்கள் பலர் தமிழகம் வந்து பல பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தேர்தல் பரப்புரைக்காக கோவை வந்திருந்தார்.

அப்போது அவர் செல்லும் பாதையில் திறந்திருந்த கடைகளை மூட சொல்லி பாஜகவினர் பிரச்சினை செய்ததுடன், கற்களை வீசி கலவரம் ஏற்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிய நிலையில் இந்த செயலை பல கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் மீது பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments