Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவிக்காக யாகம் நடத்தினாரா பொன்.ராதாகிருஷ்ணன்?

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (09:48 IST)
கன்னியாகுமரி தொகுதி எம்பி, மத்திய இணை அமைச்சர் என கடந்த ஐந்து ஆண்டுகளாக வலம் வந்த பொன் ராதாகிருஷ்ணன், கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததால் எந்த பதவியும் இல்லாமல் தற்போது உள்ளார்.

எனவே காலியாக இருக்கும் தமிழக பாஜக தலைவர் பதவியையாவது பிடிக்க வேண்டும் என அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக கும்பகோணம் அருகே அய்யாவடி பிரத்யங்கிராதேவி கோவிலில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் யாகம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே கோவிலில் அமித்ஷாவுக்காக யாகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் தான் அவர் பாஜகவின் தேசிய தலைவராகவும், உள்துறை அமைச்சராகவும் ஆகியுள்ளார். இதே பாணியில் இந்த கோவிலில் தானும் யாகம் செய்தால் தனக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கிடைக்கும் என பொன் ராதாகிருஷ்ணன் நம்புவதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments