Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்: கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (21:28 IST)
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் 11 எம்எல்ஏக்கள் தகுதி செய்ய வேண்டுமென்றும் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை ஒன்றை ஜனாதிபதி தள்ளுபடி செய்துள்ளார் 
 
டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் உள்பட 11 எம்எல்ஏக்கள் இரட்டை பதவிகளை வகித்து வருவதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு எம்எல்ஏ மற்றொரு பதவியை வகிப்பது சட்டவிரோதம் என்றும், இதனால் இந்த 11 எம்எல்ஏக்களின் பதவியை நீக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகார் குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசுக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் 11 எம்எல்ஏக்களும் இரட்டை பதவிகளை வகித்தாலும், கூடுதலான பதவி மூலம் சம்பளம் உட்பட எந்த சலுகையையும் அவர்கள் பெறவில்லை என்றும், அதேபோல் கூடுதல் அதிகாரமும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும், எனவே இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் பதிலளித்தது 
 
இந்த பதிலை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தார். இதனை அடுத்து டெல்லியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments