Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க குழந்தைகளுக்கு நாங்க பொறுப்பில்ல..! – பெற்றோரியம் கையெழுத்து பெறும் பள்ளிகள்!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (09:11 IST)
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து பல தனியார் பள்ளிகள் “பொறுப்பு துறப்பு” படிவத்தில் கையெழுத்து கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்த போராட்டம் மற்றும் கலவரங்களில் பள்ளி சூறையாடப்பட்டது. அதை தொடர்ந்து பல தனியார் பள்ளிகள் “தங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல” என்ற சான்றில் பெற்றோரிடம் கையெழுத்து பெறுவதாக புகார் எழுந்துள்ளது.

சில தனியார் பள்ளிகள் அந்த சான்றில் கையெழுத்திடாவிட்டால் மாணவர்களின் டி.சியை பெற்று செல்லுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

நான் முதல்வன் திட்டத்தில் படித்து UPSCல் முதல் ஆளாக வந்த மாணவர்! - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

நீட் தேர்வு பயிற்சி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை.. ஒரே பயிற்சி மையத்தில் இது 11வது சம்பவம்..!

சவுதி எல்லைக்குள் நுழைந்த மோடி விமானம்! சுற்றி வந்த அரேபிய போர் விமானங்கள்! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments