Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைகிறது ரயில்வே மற்றும் அஞ்சல் துறை: புதிய பார்சல் சேவை தொடங்க திட்டம்!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (11:42 IST)
தமிழகத்தில் ரயில்வே மற்றும் அஞ்சல் துறை இணைந்து புதிய பார்சல் சேவை தொடங்க இருப்பதாகவும் இந்த பார்சல் சேவை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் ரயில்வே அஞ்சல் துறை இணைந்து புதிய பார்சல் சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ரயில்வே மற்றும் அஞ்சல் துறை இணைந்து உருவாகும் புதிய பார்சல் சேவை ஏற்கனவே வாரணாசியில் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அவை மக்களுக்கு மிகப்பெரிய பயன்பாடாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து தமிழ்நாட்டிலும் விரைவில் ரயில்வே அஞ்சல் துறை இணையும் புதிய பார்சல் சேவை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அதற்கு கோவையில் உள்ள தொழில் அதிபர்கள் நிறுவனர்கள் தொழிற்சாலை உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளதாகவும் ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார் 
 
கனரக பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் ரயில் பெட்டிகளில் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில் நிலைங்களுக்கு பார்சல்களை மக்கள் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என்றும் புதிய பார்சல் சேவையில் வீடுகளில் இருந்து ரயில் நிலையத்திற்கும், ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கும் பார்சல் சேவையை கொண்டுபோய் சேர்க்கும் பணியை அஞ்சல்துறை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ பலத்தை அதிகரிக்க.. தளபதிக்கு கூடுதல் அதிகாரம்..! - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சரியான நேரத்தில் பாகிஸ்தானை தாக்கும் பலுசிஸ்தான் விடுதலைப்படை.. உள்நாட்டு நெருக்கடி அதிகரிப்பு..!

சைபர் தாக்குதலால் ஏடிஎம், வங்கி சேவை பாதிப்பா? முன்னணி வங்கிகள் விளக்கம்..!

24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி நீட்டிப்பு! - தமிழக அரசு அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பது ஆபத்து!! IMFக்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments