Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

Mahendran
சனி, 18 மே 2024 (11:13 IST)
கோடை வெயில் காலத்திலும் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் ஆங்காங்கே மழை செய்து வருகிறது என்பதும் குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் மழைக்காலத்தில் கூட இல்லாத அளவுக்கு சென்டிமீட்டர் கணக்கில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகள் பெய்த மழையின் அளவுகளை தற்போது பார்ப்போம்.
 
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோவை மாவட்டம் பில்லூர் அணை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் தேனி மாவட்டம் மஞ்சளாற்றில் 9 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 
 
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி, நீலகிரியில் கோத்தகிரி, பர்லியார், திருப்பூரில் மடத்துக்குளம் பகுதிகளில் தலா 8 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 
 
நீலகிரி மாவட்டத்தின் ஆலக்கரை, பந்தலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் தலா 7 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 
 
இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று கூறியுள்ளது என்பது குறிப்பாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார்..!

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments