Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி வேணா ஒரு மண்ணும் வேணா... விரக்தியில் ரவீந்திரநாத்: அப்செட்டில் அதிமுக!!

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (16:04 IST)
பதவி கிடைக்காத விரக்தியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், அதிமுகவிற்கு ஆறுதல் வெற்றியாக இருந்தது தேனி தொகுதி மட்டுமே. ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார்தான் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 
 
தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கித்தர கடும் முயற்சிக்களை மேற்கொண்டார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பின் போது பங்கேற்க ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடப்பட்டது என்று கூறப்பட்டது. 
ஆனால், அவருக்கு எதிர்பார்த்தது போல பதவி கிடைக்கவில்லை. இதனால், வெற்றி பெற்றும் பயனில்லாததால் விரக்தியில் உள்ளாராம் ரவீந்திரநாத். அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இது குறித்து அதிமுக வட்டாரத்தில், ரவீந்திரநாத் பாஜகவில் இணைவதாய் வெளியாகும் தகவல் பொய்யானது. யார்தான் இந்த மாதிரி தகவலை எல்லாம் கிளப்பிவிட்ராங்களோ என அப்டெட்டில் உள்ளார்களாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments