Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் - தமிழகத்தில் இதுவே முதல்முறை!!

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (08:42 IST)
73வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. 

 
இன்று நாடு முழுவதும் 73 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா கடந்த 1950 ஆம் ஆண்டு குடியரசு நாடாக மாறிய நிலையில் இன்று 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிந்து உள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை அடுத்து அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. 
 
இந்நிலையில் 73வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் ஆளுநர் ரவி தேசியக் கொடியேற்றியது இதுவே முதல் முறையாகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments