Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு ? ஒன்றிய அரசுக்கு இல்லையா? எம்பி ஜோதிமணி கேள்வி

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (15:57 IST)
மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு ? ஒன்றிய அரசுக்கு இல்லையா என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2018-2019 ஆம் ஆண்டு  கேரள வெள்ளத்தின்போது அம்மா நிலத்திற்கு வழங்கப்பட்ட 89 டன் அரசிக்கான தொகை ரூ.205.81 கோடியை தரவேண்டுமென  மத்திய அரசு கேட்டுள்ளது.
அத்தொகையை தராவிட்டால், இந்த ஆண்டிற்காக  மா நில பேரிடர் மேலாண்மை துறையின் ஒதுக்கீட்டில் ஈடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

எனவே இத்தொகையை வழங்க முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

 இதுகுறித்து, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தன் டுவிட்டர் பக்கத்தில் ,

‘’இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத் தான் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு இல்லையா? பிறகெதற்கு வரியென்ற பெயரில் கொள்ளை அடிக்கிறது மோடி அரசு?

ALSO READ: நிவாரணத்திற்கு வழங்கிய அரிசித்தொகை ரூ.205 கோடியை கேட்ட மத்திய அரசு!
 
வரியையும்,மக்களையும் மாநில அரசே பார்த்துக்கொள்ளலாமே. வரி என்ற பெயரில் கொள்ளை அடித்துவிட்டு,  மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும்  கொடுக்காமல் வயிற்றில்.அடிக்கும் மோடி அரசை நினைத்தால் " வானம் பொழிகிறது,பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்கவேண்டும் கிஸ்தி ..." எனும் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் தான் நினைவுக்கு வருகிறது .’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.! பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்..!!

மாதம் ரூ.2100 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை..!

"குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்" - லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிப்பதா.? இபிஎஸ் கண்டனம்..!!

பாஜகவின் ஈகோவை திருப்திபடுத்தவே 'ஒரே நாடு ஒரே தேர்தல்'.! முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments