Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலாவுக்கு அடுத்தடுத்த ஆப்பு: விவேக்கின் வீட்டில் சிக்கிய கடிதம்!

சசிகலாவுக்கு அடுத்தடுத்த ஆப்பு: விவேக்கின் வீட்டில் சிக்கிய கடிதம்!
, திங்கள், 30 டிசம்பர் 2019 (17:32 IST)
சசிகலா உறவினர்  விவேக் ஜெயராமன் வீட்டில் சசிகலா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியிருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
வருமான வரித்துறை விவகாரத்தில் சிக்கியுள்ள சசிகலா மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறன்றனர் சோதனையில் ஈடுப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள். அந்த வகையில் தற்போது விவேக் ஜெயராமன் வீட்டில் சிக்கிய கடிதம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
2017 ஆம் ஆண்டு நவம்பரில் இந்த சோதனையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர். அப்போது தான் சசிகலா புதிதாக பல்வேறு சொத்துக்களை வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் பல சொத்துக்கள் செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி வாங்கியது தெரியவந்தது. 
 
இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது தொடர்பாக சசிகலாவே தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளது. சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் வீட்டில் இந்த கடிதம் கிடைத்துள்ளது.
 
பெங்களூரு ஜெயிலில் இருந்த சசிகலா செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு இந்த கடிதத்தை எழுதி உள்ளார். அதில் செல்லாத ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்டியே போடாமல் வாழந்து மடிந்த பெண் காண்டாமிருகம்!