Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயஸ் கார்டன் வீட்டில் யாரோ இருக்காங்க! – தீபா புகார் விசாரணை

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (20:16 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீட்டில் யாரோ இருப்பதாக ஜெ.தீபா அளித்த புகார் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடநாடு எஸ்டேட், திராட்சை தோட்டம், போயஸ் கார்டன் வீடு என சுமார் 900 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளது. இறக்கும் முன் இவற்றை ஜெயலலிதா யாருக்கும் உயில் எழுதி வைக்கவில்லை. இதனால் இவற்றை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை அமைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு உறவுமுறை வாரிசுகள் இருப்பதால் இதற்கு நிர்வாகிகளை நியமிக்க முடியாது என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் போயஸ் கார்டன் வீடு மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதில் யாரும் தற்போது வசிக்கவில்லை என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போயஸ் வீட்டில் யாரோ இருப்பதாக ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா புகார் அளித்திருப்பதால், இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments