Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை: தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:50 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கரும்பு, மஞ்சள், இஞ்சி, மண்பானைகளை உள்ளிட்ட பொருள்களை ஏராளமானோர் வாங்குவார்கள். இதற்காக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இன்று முதல் அதாவது ஜனவரி 10 முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை இந்த சிறப்பு சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தையில் கடைகளை ஏலம் விடப்படும் என்றும் அதில் மார்க்கெட்டில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இந்த சிறப்பு சந்தையில் பொதுமக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments