Publish Date: Fri, 10 Aug 2018 (18:24 IST)
Updated Date: Fri, 10 Aug 2018 (18:26 IST)
திமுக தலைவர் கருணாநிதி மறைந்த நிலையில், திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 14 ஆம் தேதி அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் மறைவை அடுத்து அவர் வகித்து வந்த தலைவர் பதவியில் ஸ்டாலின் அமர்த்தப்படலாம் எனவும், கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இது குறித்து ஸ்டாலினிடம் கேட்ட போது பரபரப்பு ஏதுமின்றி கேசுவலாக பதில் அளித்தார். திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தவே இந்த செயற்குழு கூடுகிறது. வேறு எந்த காரணமும் இல்லை.
மேலும் கருணாநிதியின் சமாதி உள்ள இடத்தில் மேற்கூரை போடப்பட்டு அந்த இடமே முற்றிலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அதோடு கருணாநிதியின் சமாதியுள்ள இடத்தில் கட்டமைப்புகள் ஏதும் அமைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.