Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்பிரமணிய சுவாமியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்: கன்னியாகுமரியில் பரபரப்பு

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (18:12 IST)
கன்னியாகுமரியில் சுப்பிரமணிய சுவாமியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸைச் சேர்ந்த 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சில நாட்களுக்கு முன்பு, பாஜக-வைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி. சுப்ரமணிய சுவாமி, ராகுல் காந்தி போதை பொருள் பயன்படுத்துபவர் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார். இதனை தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸார் திரண்டு சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து, அவரின் உருவ பொம்மையை எரித்து போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்து, அங்கு வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர்.

இந்த போரட்டத்திற்கு, திங்கள் நகர் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments