Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்.. ஆனாலும் வெளியே வரமுடியுமா?

Siva
வியாழன், 18 ஜூலை 2024 (15:47 IST)
சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ள நிலையில் மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்காததால் அவர் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த இடைக்கால ஜாமின் என்பது தடுப்பு காவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க வரை மட்டுமே என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
மேலும் வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் சிறைப்படுத்தப்பட்டு இருந்தார் என்றால் அதற்கும் இந்த ஜாமீனுக்கும் சம்பந்தமில்லை என்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு மட்டுமே ஜாமின் வழங்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
எனவே சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்தும் அவர் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments