Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உமா மகேஷ்வரியை கொன்ற உண்மையான குற்றவாளி யார்? சீனியம்மாள் பரபரப்பு பேட்டி

Advertiesment
உமா மகேஷ்வரி
, வெள்ளி, 26 ஜூலை 2019 (09:55 IST)
உமா மகேஷ்வரியை கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட சீனியம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். 
 
முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த பெண் என 3 பேரையும் மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். உமா மகேஸ்வரியை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இதற்கிடையில் போலீஸாருக்கு சீனியம்மாள் என்னும் மதுரையை சேர்ந்த திமுக பிரமுகர் மீது சந்தேகித்தனர். அவரிடம் விசாரணையும் மேற்கொண்டர். பண பிரச்சனை காரணமாக சீனியம்மாள் உமா மகேஷ்வரியை கொலை செய்திருக்க கூடும் என விசாரணை மேற்கொண்டனர். 
உமா மகேஷ்வரி
ஆனால், சீனியம்மாள் செய்தியாளர்களுக்கு இந்த வழக்கு குறித்து பேட்டியளித்துள்ளார். சீனியம்மாள் கூறியதாவது, என்னை 2 முறை வந்து போலீசார் விசாரித்தார்கள். எனக்கு உடம்பு சரியில்லை. கூடல்நகரில் உள்ள என் மகள் வீட்டுக்குதான் நான் வந்திருக்கிறேன். 
 
வந்த இடத்தில் நான் எப்படி இப்படியெல்லாம் செய்ய முடியும்? என்று விசாரணையின் போது போலீஸாரிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் பல்வேறு கோணங்களில் எல்லாரையும் விசாரிக்கிறோம். அந்த வகையில்தான் உங்களையும் விசாரிக்கிறோம் என சொன்னார்கள். 
உமா மகேஷ்வரி
ஆனால், போலீஸார் யாரோ ஒருவர் தூண்டிவிட்டுதான் என்னிடம் வந்து இந்த விசாரணையை நடத்துகிறார்கள். அப்படியே இருந்தாலும், உமா மகேஸ்வரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், நான் மாநில துணை செயலாளர் அவருகிட்ட போய் நான் நிக்கணும்னு எனக்கு அவசியமே இல்லை. தேவையில்லாமல் என்னை விசாரித்து உண்மையான குற்றவாளியை தப்ப விட்டுவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.  
 
சீனியம்மாளின் பேட்டியின் மூலம் போலீஸாருக்கு கிடைத்து துப்பும் வீணாய் போய்யுள்ளது. காவல் துறையின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை காத்திருந்து தெரிந்துக்கொள்வோம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் இந்த சீனியம்மாள்? உமா மகேஷ்வரியின் கொடூரக் கொலையில் திடுக்கிடும் திடீர் திருப்பம்!!